எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 நவம்பர், 2015

வசந்தோற்சவங்கள்



      வசந்தோற்சவங்கள் :-

வசந்தங்கள் புஷ்பிக்கின்றன.
வசந்தவிழா
பூச்சொரியல்கள்
பூக்குவியல்கள்
பூமணங்கள்
விதம்விதமான வாசனைகள்
வண்டுகளின் ரீங்காரங்கள்
தேன் துளிகள்
சிறகுக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி
மயக்கிச் சிருங்கார உறிஞ்சல்கள்

வசந்தங்கள் புஷ்பிக்கின்றன.
வசந்த விழா
வாடிய பூக்களின்
வருத்தச் சுமைகள்
ஆசைச் சுமைகள்
வேஷமாகி விட்ட நிலை.
வண்டுகளின் சிறகடிப்பு
வதங்கிய பூக்களின்
இறப்புச் சிதறல்கள்
சோகச் சுவைகள்.

வசந்தங்கள் புஷ்பிக்கும்
மறுபடியும்.
வருடந்தோறும்.
பூக்களின் உல்லாசம்
வண்டுகளின் சல்லாபம்.
மறுபடியும்
மறுபடியும்
ஏமாற்றச் சுகங்களும்
ஆனால் என் வசந்தம்
என்னுடைய வசந்தம்
என் வாழ்வில்
ஒருமுறைதான் புஷ்பிக்கும்.
புஷ்பிக்க வேண்டும்.
வதங்கிய மலர்கள்
மறுபடியும் புஷ்பிக்கலாம்
ஆனால் மனதுக்கு
ஒரு தடவைதான்
ஒரே தடவைதான்
அது காத்திருக்கின்றது
போகிறேன்.

----- 85 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வசந்தங்கள் என்றும் புஷ்பிக்கட்டும்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...