எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2015

மேகங்களைத் தொலைத்த வானம்



மேகங்களைத் தொலைத்த வானம். :-

ஒரு வானத்தாயின் புலம்பல்.

ஓ மேகங்களே
என்னருமைச் செல்லக் குழந்தைகளே
என்னைத் தவிக்கவிட்டு எங்கே சென்றுவிட்டீர்கள்.?
உங்களைப் பகல்முழுதும் தேடித் தேடி
என் சூரியக் கரங்கள் அந்தியில் சிவக்கின்றன.
ஒரு வேளை
நீங்கள் நிலத்தலைவனிடம்
அடைக்கலம் தேடிவிட்டீர்களோ?
உங்களை அவன் தான் மறைத்துப் பதுக்கி வைத்திருக்கிறானோ ?
என் கடற்காதலன் குழந்தை எங்கேயெனக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
இரவில் அவன் தன் அலைக்கரங்களைத் தட்டி நுரைத்துக்
கோபத்தாற் பொங்கிப்போய் என்னிடம் வந்தால்
என்ன பதில் சொல்ல?
உங்களுக்கு நான் என்ன குறை வைத்தேன். ?
எதற்காக என்னைவிட்டுப் பிரிந்தீர்கள். ?
நிலத் தலைவனின் பயிர்ப்பெண்களிடம்
பேசவேண்டாம் என்று சொன்னதற்கா
என்னைத் தவிக்கவிட்டு
நிலத்தலைவன் பாதம் வருடினீர்.
அவனுக்கு உங்களைப் பிடிக்கவில்லையா
அல்லது உங்களுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட்டதால்
நதியாக உருமாறிக் கடல் தந்தையிடம்
சேர்ந்துவிட்டீர்களா >
ஆம்.. !
இரவில் என் பௌர்ணமிக் குளிர்ச்சியைத்
தாளாத என் கடல் தலைவன்
என்னிடத்தே வந்து நீங்கள் உங்கள் தவறுணர்ந்து
திருந்தித் திரும்பியதாகக் கூறி மகிழ்ந்தான்.

-- 85 ஆம் வுடைரி 

4 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...