எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மே, 2015

பழசு.:-



பழசு.:-

செத்துப் போன பாம்பைத்
தட்டச்சாய் அடிக்காதே
பிறகு அது
உன் மேலும் என் மேலும்
சதைச்சேறு வீசும்

ஊராரின் பற்கள் அவலுடன்
அதில் கிடக்கலாம்
நம் முன்னோர்களை சந்தியில்
நிறுத்தக்கூடிய
ஆதார எலும்புகள் கிடைக்கலாம்
செத்த பாம்பைத் தூரப்போடு
தட்டச்சாய் அடிக்காதே

உன் சரித்திரமும்
என் சரித்திரமும் அம்பலமாகும்
மூன்றுகோடிப் பற்கள்
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்

செத்த பாம்பைப் புதைத்துப்போடு
அது தானாகத்
தோலுரிக்காது.
சதைச்சேறும் அடிக்காது.

--1985 diary

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...