எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜூலை, 2016

மலரத் துடிக்கும் மொக்குகள் :-



மலரத் துடிக்கும் மொக்குகள் :-

ஓ.! அடிமைத் தளைகளே.!
உங்களால் என் கரங்களைத்தான்
கட்டிப்போட முடியுமே தவிர
விடுபடத்துடிக்கும் வீரியப்புறாக்களையல்ல. !
ஏ. ! உலகப் பள்ளமே .!
உன்னுள் புதைந்துகிடப்பது
முட்காம்புமட்டுதானென நினைத்துவிடாதே. !
அதற்குமேல் பூத்துச் சிரிப்பது
இளமை ரோஜா மொக்குகள். !
உன் வெம்மையால் அவற்றைப்
பொசுக்கலாமெனக் கனவு காணாதே. !
ஏனெனில் அவை இதழ் விரிப்பது
நினைவுச் சந்தோஷ வெளிகளில் !
அக்கினிப் பாள வெடிப்புக்களில் !
ஏ வீரியப் புறாக்களே !
உங்களின் செயல் வழிகளில்
வஸந்தத்தை மட்டுமே எதிர்பார்க்காதீர்கள்.
பாசம் எதிர்ப்புப் புயல்களும்
உங்களின் கடமை வழிகளில்
குறுக்கீடு செய்யும்போது
எதிர்நீச்சலிடக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஏ ..! வெடிப்புப் ப்ரதேசமே. !
வயோதிகத்தனத்தால் முணுமுணுக்காதே. !
இந்தப் புதிய மொட்டுக்களின்
முன்னேற்ற முயற்சிகளுக்கு
முதலுதவி முதல் உதவி செய். !
ஏ.. ! அடக்கப்பட்ட கரங்களே. !
வாழ்வின் இருட்டு வெளிகளில்
உழன்றது போதும்.
உடையுங்கள் தளைகளை.
புறப்படுங்கள் விடுதலைப் புலிக.
உண்மையின் ஜீவாதார ஒளியைக் காண. !!!

-- 85 ஆம் வுடைரி

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

vimalanperali சொன்னது…

விடுதலைப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்/

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விமலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...