எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

காற்று

நுண்குமிழ் புகுகாற்று
கேசநுனிப் புல்லசைத்து
கன்னவளைவில் நழுவி
அதரங்களில் தத்தி
வியர்த்ததுளி நறுமணமெடுத்து
சூழ் அறையில்
குழைந்து கிடக்கிறது
அறையும் சுவரும்.
காணாமல் போய்
உட்புகுந்த மின்சாரம்
பாசம்பெற்ற சுவர்தடவி
மூச்சடைத்து சுவாசம்தப்பி
திகைத்துச் சுற்றுகிறது.
காற்றோடும் காதலோடும்.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...