எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 அக்டோபர், 2014

நிஜத்தின் யாகம்.



நிகழ்வுகள்
மாட்டின் மூக்கணாங்கயிறுகளாய்

கனவு
நிஜத்தின் யாகத்தில்
ஆகுதிப் பொருளாய்

ஸ்வயங்களும் சுடும்
புஷ்பிக்க வழியின்றித்
தளிர்களுடன்

நம்பிக்கை
மரத்தைக் கரையான்
அரிக்காமல் காக்கும் வார்னிஷாய்
தோட்டங்கள்
மாட்டுக் கொட்டகைக்குள்

மேகக் குஞ்சுகள்
ஆகாயக் கூண்டை
உதறித் தள்ளும்.
பறக்கத் தெரியாமல்
கீழ்விழுந்து காயம்படும்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...