எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மிச்சமானவை.

**நாம் வாழ்வது ஒரு சொசைட்டி. அதனால் அதற்குப் பணிந்துதான் நடக்கவேண்டும். சமுதாயம் ஒரு சாக்கடையென்றால் அதில் நெளிந்து திரியும் புழுக்கள்தான் நாமும்.


**கண்ணுக்குக்கூட இப்போது தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது. ஏனெனில் வெளியிடும் நீரைத் தானே உறிஞ்சிக் குடித்து விடுகிறது.

**என் பிருந்தாவனத்தில் ஒரு நந்தகுமாரன் காதலை யாசித்துப் பிச்சைக்காரனாகிவிட்டான்.
**கலியுகக் கிருஷ்ணர்களிடத்தில் துரோபதைகளின் “ அரைத்”துணிகள் அபகரிப்பு. 


**சூரியன் இப்படிச் சுட்டுப் பொசுக்க எங்கிருந்து கற்றுக் கொண்டான். ஓ. இலங்கையரிடமிருந்து களவாடியதோ. 

**வருணன் ஏனிப்படி கண்ணில் படவே மாட்டேனென்கிறான். ஓ ஈழத்தில் தவமிருக்கும் இந்தியச் சீதைகளிடம் தஞ்சம் புகுந்துவிட்டானோ.

**மனக்குளத்தில் மண்ணெடுப்பு. 

**துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே. சோகம் பொல்லாதே. தோல்வி வெல்லாதே.

-- 82 ஆம் வருட டைரிக்கிறுக்கல்கள்.  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...