எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 மார்ச், 2016

எத்தனை நாட்கள்..



என் காதுகள் எத்தனை நாட்கள்
காத்திருக்கும் -
உன் குரலின் ஜலதரங்கத்துக்காய்.

என் கண்கள் எத்தனை நாட்கள்
பூத்திருக்கும். -
உன் வரவின் தரிசனத்துக்காய்.

என் சுவாசம் எத்தனை நாட்கள்
தவித்திருக்கும் –
உன் வாசத்தை நிரப்பிக் கொள்ள.

என் உதடுகள் எத்தனை நாட்கள்
பசித்திருக்கும் -
உன் உதடுகளில் பசியாறுவதற்கு.

என் மேனி எத்தனை நாட்கள்
துடித்திருக்கும் -
உன் அணைப்பில் அடங்குவதற்காய். 


-- 95 ஆம் வுடைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...