எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 மார்ச், 2015

கூண்டுக் கவிதைகள்.



கிடைத்தனவா ?
அந்த எண்ணப் பார்சல்கள்
வேர்க்க உழைத்து
சீராய்ச் சுவாசித்து
சலித்து முறிக்கும்
சிந்தனைப் பரிசுகள்.

கிடைத்தனவா ?
மனப்பறவை
உதிர்த்துப் போட்டுப்போன
மஞ்சள் சிறகுத் துளிகள்
பேனாமுனை சுரக்கும்
மையூற்றாய்ப் பொங்கி வந்த
அன்பு வெள்ளங்கள்.

கிடைத்தனவா ?
வெய்யிற்திடல்க்
கூட்டங்களில்
நீல ஆகாயம் பார்த்துப்
புஷ்பிக்கும் பூக்கள்.

கிடைத்தனவா ?
உருவ உருவ
கொட்டிக்கொண்டே இருக்கும்
மகிழம்பூக்களாய்
பன்னீர்ப் புஷ்பங்களாய்
உடல் சிவந்து 
முகம் வெளுத்த
சங்குப் பூக்களாய்
சிதறிக்கிடக்கும்
நீல எழுத்துள் அடைபட்ட
கூண்டுக் கவிதைகள்

-- 84ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

kingraj சொன்னது…

சிறந்த சிந்தனையின் பரிசு அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான கவிதை எங்களுக்கு கிடைத்து விட்டது...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கிங் ராஜ் சகோ

நன்றி தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...