எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பௌர்ணமிப் புகை

ஓரிரவுப் ப்ரயாணத்தில்
மெல்லத் தேய்ந்த பௌர்ணமி
விடியலில் ஊர் சேர்ந்தது என்னுடன்.
வெள்ளி சுமந்த முகத்தைத்
தங்கமுலாமிடுகிறது வெய்யில்.
யானை நிழல் போர்த்துகிறது
விரிசடை ஆல நிழல்.
நுரையீரலில் நிரம்புகிறது
பனிப்புல் புகைக்கும் குளிர்.
மரக்கிளைக்குள் புதைந்து
உரையாடிக் களிக்கிறது குயில்.
வாய் திறக்கும்போது
வட்டமாய் உருண்டு வெளியேறுகிறது
சுமந்து வந்த நிலவுப் புகை..

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...