எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சூரியச் சாமரம்.

இரவில் விழுந்த மழைமுத்தங்கள்
இலையெங்கும் வழிந்து கிடக்கின்றன.
பாலாவியாய்க் காற்றில் அலசி
இலைகளை உலர்த்துகிறது தோட்டம்.
சூரியச் சாமரம் இலைவெளி புகுந்து
தூபம் போட்டுக் கொண்டிருக்கிறது.
கூதலை உண்ட புள்ளினங்கள்
உறைந்து கரைந்து சிறகு விசுறுகின்றன.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...