எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கொதிமலை.

நீலவண்ணம் பொதிந்த
பெண்ணுடல் கடலை ஒத்திருக்கிறது.

நதிகளின் சங்கமிப்பும்
மழையின் உயிர்த்துடிப்பும்
பெருஉப்பைப் போக்குவதில்லை.

நீளமாய் மடிந்து மடிந்து
மன அலை விரித்துச்
சொல்லவந்ததைத் சொல்லாமல்
முழுங்குகிறாள்.
சமயத்தில் சுற்றியிருக்கும்
அனைத்தையும்.

நீலம் நீலத்தோடு கரைகட்டாதவேளை
உள்ளோடிப் பார்த்தால்
தெரியக்கூடும் சில கொதிமலைகளும்
பல கப்பல்களும்
இன்னும் உள்ளிழுக்கும் பள்ளத்தாக்கும்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...