எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

விடியல்.

இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது
கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு.

பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள்
அலையாய்த் தழுவும் காற்றில்.

நிலவில் ஊறிக் கொண்டிருக்கும் மரம்
நனைந்தாடுகிறது பால் மயக்கத்தில்.

சத்தமின்றி விரைந்தாடுகின்றன இலைகள்
கசிந்திறங்கும் குளிரின் பிசுபிசுப்பில்.

கலங்கரை விளக்காய் கனவில் ஈர்க்கிறது
கலவியற்றுக் கலந்தவளின் கண்கள்.

வெளிறும் கடல் வற்றத் தொடங்குகிறது
துருவனின் கைபிடித்துக் கரையோர மணலாய்

சிறைப்படுகிறது திசையற்றுத் திரியும் சூரிய மீன்
வடிகட்டியாய் அலையும் விடியலின் கூரிய கரங்களில்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...