எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஓநாய் வணக்கம்.

பனிப்பாறைகளுக்குள்
உறைந்துள்ளன எச்சங்கள்
கருத்தும் அழுகியும்.
தழையுண்ணிகளாய் இருப்பதோ
மாமிச பட்சிணிகளாய் இருப்பதோ
கணங்கள் முடிவெடுக்கின்றன.
துண்டு துண்டாய்ப்
பிளவுபடுகின்றன நிலங்கள்
துளிர் உண்ணும் உண்ணிகளால்.
தீமை உரித்துத் தந்திரம் வடிக்க
பனி எச்சங்களால் உயிர்க்கும்
ஓநாய்கள் வணக்கத்துக்குரியதாகின்றன.
  

2 கருத்துகள்:

vimalanperali சொன்னது…

ஓநாய்கள் எப்பொழுது வணக்கதிற்குரியவை அல்ல,,/

Thenammai Lakshmanan சொன்னது…

இருக்கலாம் விமலன். அவை எக்கோ ஸிஸ்டத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் அப்படி எழுதினேன்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...