எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

வலை அலை வெளி.

நமது போர் நம்முடனே
வட்டமானதும் தட்டையானதும்
நம் உலகம்.
ஒளிதலுக்கு இடமில்லா
வலை அலை வெளியில்
நமது வியூகங்களும்
யூகங்களும் நம்மையே
மையப்படுத்துகின்றன.
கனவு வெளிகளில்
காக்கி மனிதர்கள் சுற்றியிருக்க
வளையமிட்ட நூல்கற்றையில்
தலை நுழைக்கிறேன்.
விழிகளைக் களவாடிய
குற்றமொன்றுதான் உனது.
தடதடக்கும் இறக்கைகளோடு
பட்டாம்பூச்சியாயிருக்கிறாய்.
முட்டி மோதி மோதி என்
இருட்டறையை வண்ணமாக்கியிருக்கிறாய்.
விலங்குகள் உன் விரல்தீண்டுமுன்
சதுரத் திறப்பில்
உன்னைத் தப்பிக்கவிடுகிறேன்.
நீ உதிர்த்துச் சென்ற
வண்ண வாள் கொண்டு
என்னைச் சிரச்சேதம்
செய்கிறேன்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...