எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2016

சவலை



உள்ளத்தில் எழுதப்பட்ட நினைவுகளை
எந்த ரப்பர் கொண்டு அழிக்க ?
இப்பிடிக் கவலைப்படுவது
அனாவசியமாமே ?
அர்த்தமற்றதாமே ?
முட்டாள்கள். !
மனதைப் புரிந்து கொள்ளாத மடையர்கள்.
உள்ளத்தை அறியாத உலுத்தர்கள்.
நினைவுகளை மதிக்கத் தெரியாத மனித உள்ளங்கள்.
உணர்ச்சிகளை உணராத மடையர்கள்.
புரிந்தாலும் பிரித்தாளுகிற பொய்யர்கள்.
நெஞ்ச ஏட்டில்
இதமான வெம்மையுடன்
எப்போதும் புதிதாகத் தோன்றுகின்ற
பொன்னால் பொறிக்கப்பட்ட
பழம்பெரும் நினைவுகள்.
என்னை வைத்தே விளையாடி
எனக்கு அலுத்துவிட்டது.
அதனால் மற்றவரை
செஸ்போர்டு காயின்ஸ் ஆக
வைத்து நகர்த்தி
விளையாடப் போகிறேன்.
ஆனால்
இப்போது மட்டும்,
இருளின் பிடியில்
இருளின் மடியில்..
சவலைக் குழந்தை போல
தலைகுப்புற விழுந்து கிடக்கின்றேன்.

- 82 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...