எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 மே, 2016

தடுமாறும் தவிப்புகள்: தடம் மாறும் தவிப்புகள் :-



தடுமாறும் தவிப்புகள்: தடம் மாறும் தவிப்புகள் :-

என் அரண்மனைச் சாளரங்களில்
கண் கொத்தும்
விஷப் பாம்புகள்.
குடி புகுந்ததால்
கூட்டுக்குள் ஒடுங்கும்
சுயநல நத்தையாகிப்
போனேனே. !
என் பாவங்களுக்குப்
பிரதியாய்ப்
பரிகாரங்கள் பல செய்தும்
பலன் மட்டும்
இன்னும் கிட்டவில்லை.
இந்தச் சீதை
எத்தனை காலம்தான்
அசோகவனத்தில்
தவமிருப்பாள் ?
எப்போது இராமனின் வருகை ?
ஏன் இந்தக் காலதாமதம் ?
இராமன்களே
இராவணர்களாக மாறும்போது
சீதைகளுக்கு ஏது விடுதலை ?
ஓ.!
நெருப்பில் மூழ்கி
எழுந்து வந்த
சீதையையே இந்த உலகம்
சோதனை செய்த போது.
நம்பாத போது
இந்தக் காலத்து
ஜானகிகளை
எப்படி நம்பும் ?
எப்படி நடத்தும் ?
என்றோ ஒரு நாள்
வரும் உன் அழைப்புக்காக
இன்றே என் மனம்
தவிக்கத் துடிக்கத்
தொடங்கிவிட்டது.
ஏனெனில் நீ
என்னை அழைப்பாய் என்ற
நம்பிக்கை இருப்பதால்தான்.
உதயதீபமாய் நீ வருவாய்
என எண்ணி அஸ்தமன இருளில்
அடிபணிந்துள்ளேன்.

88888888888888888888888888888888888888
பனி மூட்டங்களின் குளிர்ச்சி
கிளர்ச்சியைத் தூண்டுகின்றது.

 --  83 ஆம் வருட டைரி.  


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...