எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

வேர்களைக் காணவில்லை :-



வேர்களைக் காணவில்லை :-

வேர்களைக் காணவில்லை
என்னின் வேர்களைக்காணவில்லை.
ஊற்றுப் பெருக்காய்
என்னுள் கலையெனும் கிளைபரப்பி
இலைகளால் இதமாய்ப் போர்த்திப்
பூக்களை வெளிச்சிதறவைத்த
வேர்களைக் காணவில்லை.
என்னின் வேர்களைக் காணவில்லை.

அடிமன ஆழத்தில்
ஆசையாய்த் துளைவிட்டு
விருட்சமாய்ப் படர்ந்து
கிளைவெடித்துப் பயணம் செய்து
தூரதேசம் சென்று போச்சோ
துரத்தியும் காணல்லையே

அறிவெனும் இராஜாங்கத்தில்
அட்டனக்காலிட்டமர்ந்து
அதிகார ஆலோசனைகள்
சொல்லிக்கொடுத்துவிட்டு
செயலாற்றும் வேளைப்போது
சொல்லாமல் கொள்ளாமல்
பூமியின் ஆழம் அதனின்
தன்னைப்புதைத்துப் பதித்துக் கொண்டதோ

மனசுள்ளே தேடுகின்றேன்.
மதி மயக்கத்தால் வாடுகின்றேன்.

மரங்களின் கறுப்பு உடைகளில் புகுந்து
செடிகளின் பச்சை ஆபரணங்களைக் களைந்து
மனதுள்ளே குடைந்து குடைந்து
வேர்களைக் காணும் ஆசையில்
துளையிட்டுக்கொண்டே போறேன்.
என்னுள்ளே காணமல் போச்சோ
என்னைவிட்டுப்
புழுங்கிப் பதுங்கும் என்னைவிட்டு
காலார நடந்துபோய் கொஞ்சம்
காற்று வாங்கி வரப்போச்சோ
சொல்லிட்டுப் போனால் என்ன
இதயத்துள் சிணுங்கும் குரல்கள்
வேர்களே கேட்கலையோ நீங்கள்.

ஜிர் ஜிர் என்று உள்ளத்தின்
ரீங்கரிப்புக்கள் மரங்கொத்திப்பிடுங்கலாய்
நிம்மதியை விழுங்கும் வேளையில்
காணாமல் போன வேர்களே நீங்கள்
சீக்கிரம் வழி விசாரித்து என்
மனவீடு வந்து சேருங்களேன்.


-- 85 ஆம் வருட டைரி 

4 கருத்துகள்:

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

நல்லா தேடிப்பாருங்க .உள்ளுக்குள்ளே தான் இருக்கு ----சரஸ்வதி ராசேந்திரன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் சரஸ் மேம். இருக்கு :)

நன்றி டிடி சகோ

நன்றி சுரேஷ் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...