எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

போதுமென்ற மனம்:-



போதுமென்ற மனம்:-

என்னுள்ளே பொறாமையின் தேக்கங்கள்
இது பொறாமையா இல்லை
இயலாமையின் சுயதரிசனமா
தேர்ந்தெடுப்பதில்
தவறு நேர்ந்துவிடுமோவென்ற பயமா.
நல்லதாய்க் கிடைக்கவேண்டுமேயென்ற
ஏக்கமா.
இல்லாமைகளையும்
இழந்தவைகளையும் பார்த்து
மனசின் மூலையில்
எச்சரிக்கை விடுக்கும்
ஆன்மக்குரலா.
ஆட்டை நினைத்து முயலைவிட்ட
நரியின் நிலையாய்த்
தடுமாறக்கூடாதேயென்ற நடுக்கமா?
இது பாலினுள்
எப்போதோ விழப்போகும்
நச்சுத்துளிக்குப் பயந்து
ஏற்பட்ட கலக்கமா.
பால் திரியக்கூடாது என்ற சட்டமா
என்ன
ஆனால் திரைந்தபால்
நல்ல தயிராக ஆகமுடியாது
ஆக்கமுடியாது
இது நிதரிசனமான உண்மை.
இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்து என்பது
என்னுள் உருவாக வேண்டும்.
(போற்றுவார் போற்றுதலும்
தூற்றுவார் தூற்றுதலும்
போகட்டும் கண்ணனுக்கே.

-- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...