எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஒட்டகங்கள்



ஒட்டகங்கள் நடந்தன
செருக்காய்
திமிலில் நீர் சொருகிய
செருக்காய்
ஒய்யாரமாய்
முதுகு வளைத்துக் காண்பித்து
அலட்சியக் கால் புதைத்து
ஒட்டகங்கள்
நடக்கத்தான் செய்தன.
என்றேனும் ஒருநாள்
பாலையைக் கடப்போமென.
தினமும் விடியல்
சுட்டுவிட்டுத்தான் சென்றது.
கரைந்துபோனது நீர் மட்டுமல்ல.
திமிலில் திமிரிய
கொழுப்பும்தான்.
குறைந்துபோயின
ஒட்டகங்கள்.
இருந்தாலும் அவை
நடக்கத்தான் அல்ல
நகரத்தான் செய்கின்றன.
ஒட்டகங்கள்
தள்ளாடும் ஒட்டகங்கள்.

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...