எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மழலை மழை

மழலை மழை.



மழை என்பது உன்னைப் போலவும்
என்னைப்போலவும்
எங்கப்பா , அம்மா ,
தம்பியைப் போலவும் இருக்கும்.
அது மரத்திலிருந்து இறங்கி வரும்.
அது நல்லா டான்ஸ் ஆடும்.
அது பச்சையாகவும் சிகப்பாகவும்
வெளுப்பாகவும் இருக்கும்.
அது பாவாடை சட்டை போட்டுக்
கொண்டு இருக்கும்.
மெழுகுவர்த்தி மாதிரி
கண்ணாடி உருகி
சொட்டுச்சொட்டாய் விழுமா.
அதுதான் மழையா.
ஆகாசத்தில் எந்த வீட்டிலிருந்து
இதைத் துளித்துளியாய் ஊற்றுகின்றார்கள்?
ஆத்திலேருந்து எப்படித் தண்ணீரை
மேலே கொண்டு போவார்கள்.
ராக்கெட்லயா
ஏரோப்ளேன்லயா
ஹெலிகாப்டர்லயா
பெரிய்ய ஷவர் வைச்சுத் தெளிப்பாங்களா
சொல்லு மாமா
நீ பேசுவது மிக இனிமையாய்
மழையின் இசைச்சொல்லாய் இருக்கிறது.
நீ கேட்கும் கேள்விகள் மிகச் சிறந்தவைதான்
ஆனால் நான்
உன்னைப் போலவே எனக்கும் தெரியாது.
என் மாமாவிடம் கேட்டதற்கும் அவர்
இப்படித்தான் ( என்னைப்போலவே ) விழித்தார்.

-- 80  ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

குழந்தைகளின் கேள்விக்கு பதில் கிடைக்காது சகோ அருமை.
தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி தளிர் சுரேஷ் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...