எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

சூன்யம்.


16.2.85 பீ. மு . அபிபுல்லா & கவிஞர் அரு. நாகப்பன் கலந்துக்கொண்ட கல்லூரிக் கவியரங்கின் போது சும்மா எழுதியது. :-

எறும்பு அலைகின்றது.
சூன்யத்தின் சூன்யம் கேட்டு
எறும்பு அலைகின்றது.

சருகு இலைகளைப் புரட்டிப் போட்டு
மண்ணில் குளித்தெழுந்து
குளித்தெழுந்து
சூன்யம் பற்றிக் கொள்ள
எறும்பு பரபரக்கின்றது.
வெளிச்ச அரண்கள்
தாவிக் குதித்து
நிழல் சிம்மாசனங்களில்
ஓடிக்கொண்டே ஓய்வெடுத்து
சுறுசுறுப்பாய் அலைகிறது.
மரங்களில் விறுவிறுப்பாய் ஏறி
பச்சை இலைகளின்
நரம்பு எலும்புகளில்
சூன்ய இரத்தம் உறிஞ்ச திரிகின்றது.

சூரியன்கள் மேற்கில் உதிக்க நேரும்போது
கருமேக நம்பிக்கைகள் பொய்க்கும்போது
உதவியற்ற சூல்களால்
சூன்யத்துள் சூன்யமாய்ச் சுருளும் எறும்பு
சூன்யமே சூன்யமாகிப் போனால் என்னாகுமென
அந்தச் சூன்யமே சூன்யம் தேடுகின்றது.

மரப்பட்டை தேசங்களில்
மனிதமற்ற உடல்களில்
கடித்துக் கடித்துச் சூன்யம் தேடுது
சூன்யத்தைச் சூன்யம் தூக்கிப் போகுமோ

எங்கே சூன்யம் எங்கே சூன்யம்.
எங்கே நான்.. சுருண்டு கொள்ளும்
என் சுகமான அரியாசனம்.
மனசில் சோகம் குவித்துச் சரித்து
அந்த எறும்பு அலைகின்றது.
சூன்யத்தின் சூன்யம் கேட்டு
எறும்பு அலைகின்றது.

{சமர்ப்பணம் இந்த அவைக்கும். பீ. மு. அபிபுல்லாவுக்கும் }.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...