எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2015

இவள் ஒரு கங்கை:-



இவள் ஒரு கங்கை :-

இவள் எழுதட்டும்.
இவளை எழுத விடுங்கள்.
எழுத்துப் பிரவாகங்கள்
பொங்கிவரும் வலிமைகள்.
இவளே கங்கை
இவளே காவிரி
இவளின் அமைதியில்
ஆழத்தில் ஆவேசத்தில்
அன்பில் மூழ்கி
புதுப்பிறவி எடுக்கவா
இவ்வளவு கூட்டமும். ?
இவள் சமாதி கூட
கவித்துவம் பேசும்.
இவள் பிறப்பிலும் வளர்ப்பிலும்
பாயும் இளமைப்ப்ரளயத்திலும்
திரிவேணி சங்கமத்திலும்
சங்கமத்திற்குப் பின்னும்
எழுத ஆசைப்படுகின்றாள்
இவளின் காவிரி உடல்களை மட்டுமல்ல
பல மனங்களையும் வருடி நெருடி
அழுக்கைச் சுரண்டி
அன்புச்சுரங்கமாய் ஆக்கியிருக்கின்றது.
இவள் எழுதுவது குப்பைக் காகிதங்களில் அல்ல!
மனனத் தீவுகளில்.
இவள் எழுதுவது குபேர சொர்க்கத்தில் அல்ல
குச்சுவீடுகளின் குறுநிழலில்.
இவள் எழுதுவது மையினால் அல்ல
மைவிழிகளின் நீரினால்
இவள் எழுதுவது அக்கரைப் பச்சையையல்ல.
இக்கரை சுடுகாடுகளை.
இவள் எழுதுவது ஆதிக்கக் கற்கள்
தன் பேனா முனையின் கூர்மையில்
உடைய வேண்டியே.
நொந்த உள்ளங்கள் காகிதச் சோலைகளில்
கனவுக் கனிகளை ருசித்துச் செல்ல வேண்டியே
இவள் அடித்துக்கொண்டு வந்த
எண்ணக் குப்பைகள்
அங்கங்கே சிதறவிட்டுச்
சென்றுவிடுகின்றாள்.
இவளின் சமாதி கூட
கவித்தும் பேசும்.
இவள் எழுதட்டும்.
வறண்ட வயல்களே
உங்களை வளப்படுத்த விரும்பும்
இவள் எழுதட்டும்.
இவளை எழுத விடுங்கள்.
தயவுசெய்து இவளை
அணைகட்டி விடாதீர்கள்
இவளுக்குத் தளைகள் பிடிக்காது
நாளையே உடைப்பெடுத்தால்
தாங்கமாட்டீர்கள் ஆதிக்கக்கற்களே.
இவளை எழுதவிடுங்கள்.

-- 85 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...