எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 செப்டம்பர், 2015

உன்னைப்பார் முதலில்



நீ உன்னைப்பார் முதலில் பிறகு..

உனது முதுகின் அழுக்குகள்
முகபடாம் களையப்படாமல் இருக்கும்போது
அடுத்தவள் முதுகிலென்ன அழுக்காராய்ச்சி ?

த்தூத்தேறி.! வெட்கமாயில்லை.
உங்களுக்கெல்லாம்.!
அடுத்தவள் அந்தரங்கத்தைத்
தரம்பிரிப்பது
தரங்கெட்ட செயலென்று.
பெண்ணைப் பெண்ணே வர்ணித்து
நிர்வாணித்துப் பார்க்கும்
கேவலத்தை விட
கீழ்த்தரத்தை விட
ஒரு பெண் ஆணை நேசிப்பது
புனிதமானது தெய்வீகமானது.

உங்களுடைய சங்கமங்கள் வேண்டுமானால்
சந்தேகங்களுக்காளாகலாம்.
ஆனால் எங்களுடையவை
சந்தேகத்தின் சல்லிவேரைப்
பதம்பார்த்து ருசித்து முடித்தவை..

யார் சொன்னது உங்களுக்கு
நேசிப்பது பாபமென்று. ?
பாபத்தின் மறுபிறவிகளே
என் பாக்களில்
கழித்துவிடப்பட்ட எழுத்துக்களே..!
என் அன்புப் பாதத்திற்குத்
தலைவணங்காத
உடைந்த ஊவாமுட்களே. !
உங்களது முள்ளுத்தனத்தை
உங்களைக் கொண்டே முறியவைப்பேன்.

சும்மா இருப்பவளிடம்
சவால் விட்டால் உங்கள் சிண்டு
ரெண்டுபட்டுப் போகும்.

நாங்கள் சாக்கடையில்
வீழ்ந்த மீன்கள் என்பதை
ஒப்புக்கொள்ள வேண்டுமானால்
அந்தச் சாக்கடையே நீங்கள்தானென்பதை
உங்களுக்கு உணர்த்தவேண்டியிருக்கும்.
எனவே உங்கள் நாற்றம்
எங்களைத் தொற்றிக் கொண்டதில்
வியப்பிற்கிடமேது ?
( இது எப்பிடி இருக்கு ?)

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...