காலைநேரக் கம்பங்கள்
கொடியுடன் கொஞ்சி உறவாட
மலர்க்கொத்துகள்
மந்தகாசப் புன்னகைக்க
சின்ன இலைகள்
சலசலத்துச் சிரிக்க
மனசின் இனிமை நினைவுபோல
ஒற்றைச் சுருள் நெற்றி அரங்கில் நர்த்தனமாட
அவள் நினைத்தாள்
சூரியன் தூங்கிவிட்டானோ
அவளின் கைபோல மனசும்
நினைவுப் பின்னலைப்
பிரித்துப் பிரித்துப்
பின்னி முடிந்தது.
மாலை நேரக் காற்றில்
மல்லிகை மணக்க
மதியம் வரை சஞ்சலித்த மனம்
சந்தோஷக் கும்மாளத்தில்
கும்மியடித்தபோது
சோலைக் காற்றில் பறந்துவந்த
சிவப்பு ரோஜாப்பூவிதழ் புலம்பியது.
என்ன பெண் இவள்
துயிலப் போய்விட்ட சூரியனை
இரவில் எதிர்பார்க்கிறாள்.
விடியாத இரவல்லவோ
இவளுக்குச் சொந்தமாகி விட்டது
எந்தத் தைரியத்தில் நான்
இவள் முன் வந்தேன்.என்று
-- ஒரு சிநேகிதிக்கு.

கொடியுடன் கொஞ்சி உறவாட
மலர்க்கொத்துகள்
மந்தகாசப் புன்னகைக்க
சின்ன இலைகள்
சலசலத்துச் சிரிக்க
மனசின் இனிமை நினைவுபோல
ஒற்றைச் சுருள் நெற்றி அரங்கில் நர்த்தனமாட
அவள் நினைத்தாள்
சூரியன் தூங்கிவிட்டானோ
அவளின் கைபோல மனசும்
நினைவுப் பின்னலைப்
பிரித்துப் பிரித்துப்
பின்னி முடிந்தது.
மாலை நேரக் காற்றில்
மல்லிகை மணக்க
மதியம் வரை சஞ்சலித்த மனம்
சந்தோஷக் கும்மாளத்தில்
கும்மியடித்தபோது
சோலைக் காற்றில் பறந்துவந்த
சிவப்பு ரோஜாப்பூவிதழ் புலம்பியது.
என்ன பெண் இவள்
துயிலப் போய்விட்ட சூரியனை
இரவில் எதிர்பார்க்கிறாள்.
விடியாத இரவல்லவோ
இவளுக்குச் சொந்தமாகி விட்டது
எந்தத் தைரியத்தில் நான்
இவள் முன் வந்தேன்.என்று
-- ஒரு சிநேகிதிக்கு.

1 கருத்து:
நன்றி தளிர் சுரேஷ்
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))