எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 மே, 2016

இயற்கைப் பெண்ணே !



இயற்கைப் பெண்ணே !

நீ இவ்வளவு அழகு மிக்கவளா ?
உனக்குத் தெரியாமல்
என்னையறியாமல்
நானொரு நாள்
செயற்கையின் மடியில் அமர்ந்து
அதன் பிடியில்
மாட்டிக்கொண்டு உன்னழகை
இரகசியமாய்ச் சுவைத்தேன்.
உன் தனபாரங்களைத் ( மலைமுகடுகள் )
தழுவிக் கிடக்கும்
மேக முந்தானைக்கு என்ன
வெட்கம் வந்து
அடிக்கடி நழுவி ஓடுகிறது.
உன் உடலில் உள்ள
வளைவுகள்தானா இந்தப்
பள்ளத்தாக்குகள்.
உன் உடலில் உள்ள
வளைவுகள்தானா இந்தப்
பள்ளத்தாக்குகள்.
உன் இடை ( நதி )
ஏன் இவ்வளவு நீளம்
ஓடுகிறது. ?
உன் பின்புறம் ( கடல் )
இவ்வளவு அகலமாய்
நீலநிறமாய் உள்ளதே. !
உன் கரங்கள்
மரங்களாகிக் கிளைகளாகி
தழைத்து வளர்ந்து
கொண்டே இருக்கிறதோ ?
உன் கால்கள்
வேர்களாகி நன்றாகப்
பூமியினைப் பற்றிக்
கொள்கின்றதோ ?
உன் முகத்தை ( நிலவு )
ஏன்
மேகமுக்காட்டுக்குள்
புதைத்துக் கொள்கிறாய் ?
வானக் காதலன்
மார்பில் முகம் பதித்து
இன்புற்றிருக்கின்றாயோ ?
அதனால்தான்
கீற்றுப் புன்னகை ( பிறைச்சந்திரன் )
செய்கின்றாயோ ?
வானக் காதலன்
தழுவும் நேரம்!
வந்து தடுக்குதோ
முந்தானை மேகம் !.

-- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...