எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

குடம்.:-



குடம்.:-

கோயில் குளத்தில்
மண்பூசித்
தண்ணீர் தின்றுவரும்
அறியாமை.

கல்லில் இடுப்பில்
இடுப்பில் கல்லில்
இடுங்கி நசிந்து
முதிர்முத்திரை
மாட்டிக்கொள்ளும்.,
அனுபவம்.

சேறுகழுவிப்
பாதி நிறையும்போது
காற்று விலக்கி சத்தமிட்டு
நிறைதல் காட்டிக்கொடுக்கும்.,
அகங்காரம். 

பளபளப்பணிந்து
உடல் கலக்கி
வாயில் ஜொள் வழிக்கும்
அவசரம்.

மௌனமாய் நிரம்பி
சிந்துதல் இல்லாமல்
வெற்றிடம் நீர் உடுத்து
நடக்கும்
அடக்கம் அறிவு.

டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான முடித்துள்ளது மிகவும் பிடித்தது சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...