எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜனவரி, 2015

சிநேகம் ( சுயம் )



சிநேகம் ( சுயம் )

புல்லே
நிதானமாக வளர்
கிடைத்தவுடன் விழுங்கிவிட்டு
மெல்ல அசைபோட இதென்ன
மாட்டின் இரைப்பையா

கிடைத்த நீரையெல்லாம்
உறிஞ்சி விடலாமெனப்
பேராசைப்படாதே.
அவை கடின நீர்கள்
பாறையில் இருந்து கசிபவை

அவங்காய்ந்ததாய்
அள்ளி அடைந்தால்
அஜீரணம் பிடிக்கும்.

புல்லே
சூரிய மினுமினுப்பில்
மயங்கிப் போய் நிற்காதே
மேனாமினுக்கி அது
மஞ்சள் கள் ஊற்றி
மயக்கத்தான் செய்யும்
கிறங்காதே
கருகிப்போவாய்.

உணர்ச்சியற்ற மண் மீது
கைதட்டி உயிர்த்தெழுப்பப் பார்க்காதே
காற்றின் வருடலுக்கு
ஆசைப்படாதே
சூறை உன்னைச் சிதறடிக்கும்.

மழைத்துளியில் கும்மாளமிட்டு
ஆட்டம் போடாதே
இது பிரியத் தூவலல்ல
உன்னை அழுகவைக்கப்
புறப்பட்ட ஆகுதீ

புல்லே
சந்திரனை நேசி
பனித்துளியுடன் சிநேகமாயிரு
முத்தமிடு
குளிரை உடுத்துக்கொள்.
இருட்டை நம்பு
வெளிச்சங்கள் அனைத்தும்
பகல் பிசாசுகள்
வெம்மைச் சாத்தான்கள்
அணிந்துகொண்ட போலி
வெளிச்ச ஒளிச்சிதறல்கள்
இரவை நம்பு
அதனுள்ளேதான் உன் உலகம்
காத்து இருக்கின்றது
கருமைதான் உண்மை.

-- 82 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

வெளிச்சங்கள் அனைத்தும்
பகல் பிசாசுகள்// அருமை அருமை அக்கா,
வெளிசங்களை நம்பி மோசம்போகும் பலவற்று
சிலநேரம் நாமும்தான்....

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் மலீக்கா. உண்மைதாண்டா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...