எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 ஜனவரி, 2015

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

சீர்கெட்ட மூச்சில்
சிறிதும் பெரிதுமாய்
உவப்பு கசப்பு
உறவு நிறைவு
உற்றம் சுற்றம்
உலைத்தும் கலைத்தும்.

அண்டம் நிரப்பிய
பிராணக் குழாயிலிருந்து
பிண்டம் நிரப்பி
பின்னொரு உடலாய்
உலவிக் கலவிப்
புதுப்பித்தும் நெகிழ்ப்பித்தும்

புல்தரைப் பனித்துளியிலிருந்து
வெய்யில் கதகதப்போடு
பச்சையம் சுமந்து
உடலுள் சுழன்று
உள்ளும் புறமும்
இனித்தும் தனித்தும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்பமும்... துன்பமும்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் சகோ. கருத்திட்டமைக்கு நன்றி :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...