எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 டிசம்பர், 2014

மையாய்



காற்றுக்குள்
சிதறிப்போனது
என் சுவாசம்

பாலைகளுக்குள் சோலை
இதுவோ
வரிசையோரத்துக்
கடைசித் தென்னை

சலவைக் கற்கள் கீழ்
புழுங்கும் மண்

ரோஜாக்கிளைகள்
உயிரோடு புதைக்கப்படும்
உயிர்ப்பித்தலுக்காய்

மூடிக்குள் கசியும்
மையாய் மனம்
எழுத்துக் குழந்தைக்காய்
ஏங்கும்.

-- 84 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...