எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

கொட்டில்



குரலின் சாயங்கள்
சாயங்கால வெய்யிலாய்
நீர்த்துப்போய்க் கொண்டிருக்கின்றன.
கிளறிக் கிளறிக் கரம்பைகளில்
கருவைகளைப் பயிரிடுகிறார்கள்.
காற்றின் ஈரப்பதம் உறிஞ்சிக்
கோரைப்பற்களாய் அதன் முட்கள்
அகநிர்வாணம் மறந்து
புறநிர்வாணம் தேடியவன்
பல் பேழைக்குள்
அதைத் தூர்த்துத் தூர்த்து
ஆன்மாவின் கழிவறையாக்கி
முள்வேலிகளுக்குள் கொட்டிலிட்டவன்
முகம் கோழைக்குள்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...