எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஜூன், 2013

சுயம்..


துளிர்விடும் கொடுக்கை
ஓட்டுக்குள் மறைத்து
சுருண்டு கொள்கிறது
சுயம்..


ஒற்றைக் கிளையைப்
பற்றும்போதெல்லாம்
உடைந்து விடுகிறது
சுள்ளி.


நெருப்பை விழுங்கி
நீரில் முழுகி
நிர்வாணமாய்க் கிடக்கிறது
உடல்.


ஒன்றைச் சுட்டும்போதெல்லாம்
தன்னைச் சுட்டிச்
சதிராடிச் சிரிக்கிறது
மனம்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...