எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 ஜூன், 2013

பலநிறப் பூக்கள்..

பலநிறப் பூக்கள்:-
******************************

ஊரில் இல்லை
வெளியே இருக்கிறேன்
வர நாளாகும்.
இன்னொரு நாள் பார்க்கலாம்.
எங்க போயிடப் போறோம்.
உலகம் உருண்டை.
ரொம்பச் சின்னது.
சீக்கிரம் பார்க்கலாம்.
அடுத்தவாரம் நிச்சயம்.
ஏதோ ஒரு கல்யாணத்தில் பார்க்கலாம்.
அடுத்த மீட்டிங் கட்டாயம்.
தவிர்த்துக் கொண்டே இருக்கிறேன்.,
ஒவ்வொரு சந்திப்பையும்,
நீ தெரிவித்த அதே வார்த்தைகளில்.
ஏதோ ஒரு தயக்கம்
முதலையாய் வழிமறித்துக் கிடக்கிறது
படகை எட்ட.
மரங்கள் மறைத்திருக்கும் தீவில்
காலை உரசிச் செல்கின்றன
உன் துடுப்பைத் தொட்ட அலைகள்.
கரை நோக்கி மிதந்து வருகின்றன
பல தீவிலிருந்தும் பூக்கள்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... பூக்களும் பலவிதம்...!

வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...