எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஜூன், 2013

துளசி..

களிகூர்ந்து
கருணை பொழிய
நனைந்து குளிர்கிறது
தாமரைக் கரங்களில்
துளசி..
தீபத்தின் வெம்மையில்
குளிர்காய்கிறது
திருமாலின் திருமார்பில்.
ஆரத்தி ஒளியில்
செம்மார்பில்
செம்மாந்திறுமாந்து
பிருகுவையும்
சுற்றவைக்கிறது
பாற்கடலை.
ஊறிக் கிடக்கும்
பெருமாளின்
மணம் சேர்ந்து
இணையாகிக்
காய்ந்தும்  மணக்கிறது.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மணக்க வைக்கிறது வரிகளும்...

வாழ்த்துக்கள்....

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...