எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மே, 2013

மெல்லெழும்பும் குளிர்ச்சி.

மெல்லெழும்புகிறது குளிர்ச்சி..
நீரிலிருந்து மரத்துக்கு..
மரத்திலிருந்து இலைகளுக்கு..
இலைகளிலிருந்து புற்களுக்கு..
புற்களிலிருந்து மீண்டும் நீருக்குள்..
நழுவி நழுவி விழுகிறது.

வெய்யில் வீசும்
வலைகளுக்குத் தப்பி
வலசைப் பறவையாய்ப்
பறந்து திரும்பிக்
கற்களுக்குள் விதையாகிறது
மீண்டும் கிளைபரப்ப.. :)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...