விடுமுறையில் ஊருக்குச் செல்லத்
துணியெடுத்து வைக்கும்போது
குழந்தை தன்
உடைகளை எடுத்துத் தருகிறது.
தொப்பியை எடுத்துத் தருகிறது.
ஷூக்களை எடுத்துத் தருகிறது.
பார்பி பொம்மைக்கும்
இடம் ஒதுக்கச் சொல்லிக் கேட்கிறது.
ஊர் சென்றபின் காணாவிட்டால்
குட்டு வாங்குவோம் எனத் தெரிந்தும்
வசதியாய் மறந்துவிடுகிறது,
விடுமுறை வீட்டுப்பாட நோட்டை..

2 கருத்துகள்:
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
நன்றி தனபால்..
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))