எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நிரம்பித் ததும்பும் கானகம்.

அதிகம் பேசாதேயென்கிறாய்
பேச்சைத் தவிர என்னிடம்
வேறு நூலேணியில்லை.
அதைப் பிடித்து என் உப்பரிகையில்
நுழைந்த ராஜகுமாரன் நீ.
உள் நுழைந்ததும்
சுருட்டி வைத்துவிட்டாய்
எனதான ஏணிகளை.
அந்தப்புரத் திரைச்சீலைகள்
குளிர்ந்து கிடக்கின்றன.
என் மாடமாளிகையும்
கூடகோபுரமும் வெய்யில்படாமல்
இறுகிக் கருகி.
எங்கோ தூரத்து அகழியில்
முதலைச் சத்தம்.
காற்று மரங்கள் வழி
பழ வாசனையைக் கொணர்கிறது.
ஒளித்துவைத்த நூலேணியின்
ஒரு இழையாவது தேடுகிறேன்.
பசி தீர்க்கப் பழமரம் அழைக்கிறது.
பேச்சற்ற போதில் பறக்கவோ
குதிக்கவோ தயாராகிறேன்.
கடும்பசியில் இருக்கும்
முதலைக்கு உணவாகிறேன்
அல்லது கானகம் பார்த்துவருகிறேன்.
சிறிது வெய்யில் வேண்டுமெனக்கு.
தூக்கி வீசிவிடு என்னை நூலேணியோடு.
என் சில்வண்டுக்குரல்களால்
நிரம்பித் ததும்பட்டும் கானகம்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...