எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

தீபாவளி.

எட்டுமணிப் பட்டாசுக் கூச்சலில்
நிரம்பிக் கிடக்கின்றன தெருக்கள்.
பட்சணக் கடைகளைவிட
பிரியாணிக் கடைகள் அதிகம்.
பாப்ளின் பாவாடைகளும்
ஜப்லா ஜாக்கெட்டுகளும்
டார்பாலின் கீழ் உருவமாய் அசைகின்றன.
நகரும் வெளிச்ச முகத்தோடு நடனமாடுகின்றன
அங்காடிகளும் காவல் ஊர்திகளும்.
குஸ்கா தேக்ஸாக்களோடு
குடைக்கம்பி பிடித்துக் காத்திருக்கிறார்கள் வியாபாரிகள்.
நாலு பேருக்கு நல்லது செய்ய
நமனிடம் பிணையாகியிருக்கிறான் நரகாசுரன்.
தெறித்துத் தெறித்துப் பயமுறுத்தும்
மழைக்குமுன் தீபாவளி வந்துவிடுதல் நலம்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...