எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2017

வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி.


வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி!
அள்ளி அள்ளிக் கொடுப்பான் எந்தன் தம்பி !
பள்ளி கொண்டி ருப்பான் எப்போதுமே
வள்ளி யைத்தான் மணப்பான் எந்தன் தம்பி !

ஓயாமல் சண்டை போடும் அன்புத்தம்பி!
ஆயாவீட்டு ஐயா பேருனக்கு அருமைத்தம்பி!
ஐயா போல் இருந்திடுவாய் அன்புத்தம்பி !
பொய்யே நானும் சொல்லமாட்டேன் ஆசைத்தம்பி !

பட்டப்படிப்பு படிப்பாயா எந்தன் தம்பி!
சட்டப்படிப்புப் படிப்பாயா எந்தன் தம்பி !
குடத்திலிட்ட விளக்குப் போல இருந்திடாமல் நீயும்
மடைதிறந்த வெள்ளம் போல துடிப்புக் கொள்வாயே!

டிஸ்கி :- இது என் சகோதரன் பாபு என்ற வள்ளியப்பன் என்ற சேவுகன் செட்டிக்காக அவன் பிறந்தநாளில் எழுதியது. . வருடம் நினைவில் இல்லை. 80, 81  இருக்கலாம். அவன் இப்போது இல்லை. 44 வருடங்கள் வாழ்ந்த அவன்  2013  ஏப்ரல் ஆறாம்தேதி இயற்கை எய்திவிட்டான்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...