எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

சௌந்துவுக்காக..

நேரம் நகர மறுக்கிறது
நீ உப்புமூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
கொல்லத்தின் சமையற்காரியக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ. ..

யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல் )
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர்வாளிகள்
வெய்யிலின் கருக்கலில்,
வத்தல்கள் வசலில்,
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே..

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில்  ஏறிக்கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...