எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

விலகிப்போகும் நிழல்கள்.:-



விலகிப்போகும் நிழல்கள்.:-

உருவங்கள் புரிய
நிழல்கள் விலகத்தான் ஆக வேண்டும்
ஆத்மாக்கள் உச்சிப் பொழுதில்
காலடிக்குள் புதைத்துவிட்டு
நிழல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

விகார நிழல்ப் போலிகளைத்
தேடித் தேடி அலைபாயும்
விட்டில்பூச்சிக் கூட்டங்கள்.

வெள்ளைப் பற்பூச்சுக்களில்
வெகுளிப் பேச்சுக்களில்
நிஜத்தைப் புதைத்து
நிழலை உடுத்துக்கொள்ளும்
ஜடாமுடிக் கும்பல்கள்.

சுயப் பரிமாணங்களை
இழக்க விரும்பாமல்
இழுத்துப் பிடித்துப் பின்னேயே
ஓடும் குழப்பக் கூத்துக்கள்.

ஏதாவது எழுதப்பட வேண்டும்
என விரும்பி சாக்கடையை
அப்பிக்கொண்ட வெள்ளைத்தாள்கள்.

விலங்குகளுக்குள் விரும்பி
விரும்பிப் புதையும் வெண்பாதங்கள்..

கருப்பாய்ப் பூக்க எண்ணி
சோகையாய் நீண்டு பிய்ந்த
வெளுத்த மேகங்கள்.

உருவங்கள் புரிய
உவர்ப்பை உண்ணத்தான் வேண்டும்.

நிழல்கள் விலகினால் என்ன
அவை வந்து நகரும்
சலன மேகங்கள்
வெய்யிலுக்குப் பயந்து
நிழல்களைத் தேடவேண்டிய
அவசியமில்லை.
அதுவாய்க் காலடி வருட வரும்

அதுவரை கானல் நீராய்
விலகும் நிழலை வீண் முயற்சியாய்த்
துரத்தும் வேலை வேண்டாம்
வரும் நிழல்களை
உபயோகப்படுத்தத்
தெரிந்தால் போதும்.

-- 85 ஆம் வருட டைரி


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவிலும் அருமையாகச் சொன்னீர்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...