எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 ஜூலை, 2015

செவ்விளநீர்.

கூட்டமாய்க் கடந்தார்கள்..
கூட்ட மனநிலைக் கசப்பு.
எங்கே இருக்கிறாயெனக்
கேட்டபோது
கல்லறையில் என்றான்.
அப்போது அவன் முகத்தில்
ஒரு நூல்கயிறுப் புன்னகை
அவதரித்திருக்கக்கூடும்.
தற்கொலை பிடிக்காதென்றாலும்
ஆத்மாநாமும்
ஸ்டெல்லாபுரூசும் பிடிக்கும்.
பாறைகள் காய்ச்சிய வெக்கையில்
பனம்பழங்கள்
உருண்டு கிடந்தன.
ஒரு மழையற்ற மலையில்
காற்றற்று நடந்தபோது
வெடித்த மரவேர்கள்
இடறிக் கொண்டிருந்தன.
இறங்கியதும்
ஒரு கணம்
மலை பார்க்க
மேகங்கள் சூழத்துவங்கியிருந்தன.
புழுக்கத்தால் அவை
கண்ணீர் வடிக்கக்கூடும்
விட்டுவிடுதலையாகும்
எண்ணம் துரத்துவதாகக் கூறிய
அவன்சொல்லை
ஆமோதித்துக் கொண்டிருந்தது மனம்.
கடைகடந்த போது
சீவப்பட்டுக் கொண்டிருந்தது
ஒரு செவ்விளநீர்.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

SUPER.....Sako.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாறினது மகிழ்ச்சி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...