எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 ஏப்ரல், 2015

நமது நட்பு..



நமது நட்பு :-
குறிஞ்சி மலர் போல்
அபூர்வமானது.
கொஞ்சம் நயாகரா
கொஞ்சம் சகாரா.
கொஞ்சம் ரவிவர்மா
கொஞ்சம் பிகாஸோ.
கொஞ்சம் பாலமுரளிகிருஷ்ணா.
கொஞ்சம் பேட்டைராப்.
கொஞ்சம் மல்லிகை
கொஞ்சம் கற்றாழை.
கொஞ்சம் பாசந்தி
கொஞ்சம் பாகற்காய்.
மகாமகக் குளம்போல்
புனிதமும் அசுத்தமும்.
அன்பெனும் நீருக்குள்
ஊறிக் கொண்டு வெளியே
வேற்றாளாய்த் திரியும்
வெங்காயத் தாமரைகள் போல்.
கொஞ்சம் விருப்பு
கொஞ்சம் வெறுப்பு.
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் பாசம்.
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் வம்பு.
கொஞ்சம் கனிவு
கொஞ்சம் துணிவு.
-    நவரசக் கலவையாய் நமது நட்பு.
கொஞ்சம் பக்தி
கொஞ்சம் புத்தி
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் தெளிவு.
கொஞ்சம் ஒட்டுதல்
கொஞ்சம் பரிவு.
ஆனால்
என் துயரத்திலும் பயத்திலும்
நோயிலும் எனக்குத் துணையிருந்த ஆருயிர் நீ.!
என் புத்தியைத் தூசிதட்டிய
தெளிவுபடுத்திய ஆசான் நீ.!!
அன்பையே ஆண்டவனாகக்
காட்டிய ஞானாசிரியன் நீ. !!!


-- 1995.. DIARY.

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரமாதம் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...