எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

நிராயுதபாணி

அம்பறாத்துணியில்
பாணங்கள் தீர்வதே இல்லை.
யாரை நோக்கி
எப்போது எய்யப்படவேண்டுமென
தீர்மானிக்கப்பட்ட காத்திருப்புக்களோடு
அவை செருகி இருக்கின்றன.
சோம்பல்களாலும்
விட்டுக் கொடுத்தல்களாலும்
எய்யத்தவறும்போது
தானே கீழ்விழுந்து
முனைமுறிந்து மரிக்கின்றன.
உடைந்த எலும்புத்துண்டுகளாய்
அவை சிதறிக் கிடக்கும் காட்சி
நானும் காயம்படுகிறேன்
நிராயுதபாணியாய்
என்பதன் சாட்சி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...