எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 பிப்ரவரி, 2013

குடும்பக் கூடு.

உன்னைக் காணாத போது
மனதில் வார்த்தைகளின் இரைச்சல்கள்.
நேரில் கண்ட போதோ
மொழியிழந்த மௌனியாய்..

புன்னகை பூ பூக்கும்
நட்ட தாவரங்களைப் போல நாமிருப்போம்.
சட்டிச் செடிக்குச்
சூரியவெளிச்சமாய் நம் நட்பு.

சிலந்தி வலைகளின் நடுவே
சுற்றித் திரியும்
குட்டிப்பூச்சிகள் நாம்.

பறவைகளைப் போலப் பாடவும்,
அணில்களைப் போல ஓடவும் முடியாமல்
குடும்பக் கூட்டுக்குள்
நத்தைகளாய் நாம்.

மனக் கிளைக்குள்
குயிலாய்க் கூவும்
உணர்வை மொழி பெயர்க்க
நட்பென இசைக்கிறது.

டிஸ்கி:- வீட்டு டைரியிலிருந்து 1986

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...