எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பொய்க்கால் குதிரைகள்.

பொய்க்கால் குதிரைகள் பேசுவதில்லை.
நிற்க வைத்த இடத்தில் நிற்கின்றன.
ஆடி முடித்ததும் அடங்கிப் போய்விடுகின்றன.
சோறோ, போர்வையோ
முத்தமோ ஏன் ஒரு முழம் பூவோகூட கேட்பதில்லை.
விழிக்கும் விழியில் முழிக்கின்றவா
முறைக்கின்றனவா என கண்டுபிடிப்பது அரிது.
கூட்டமாகவோ தனியாகவோ
எங்கேயும் போக விரும்புவதில்லை.
நகைச்சுவை முகத்தோடு
நகைச்சுவை அறியாதவை அவை.
லாயத்தில் கட்டிய குதிரைகள் போல
லத்தி போட்டு அசிங்கமாக்குவதில்லை.
காதலிப்பதாகக் கூறி
எவராலும் அமிலம் வீசி அழிக்கப்படாதவை.
அடுத்து ஆட்டுவிக்கப்படும்வரை

கடிவாளம் மாட்டிய பெருமையோடு
புடைத்து நிற்கின்றன புழக்கடையில் .



Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...