எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 ஜனவரி, 2013

தாம்பத்யக் குகை.

உனக்குத் தெரியாமல்
உன்னை அரவணைத்திருக்கின்றன
என் கைகள்.
நீ சண்டையிடுவதையும்
மண்டியிடுவதையும்
காதலாக்குகிறது மனம்
உன் அன்பைப் போல
கோபமும் ருசிக்கிறது
வெந்நீர் ஊற்றுக்களாய்
குமிழ்விடும் உன் கோபம்
தகிக்கிறது என்னை.
கதகதப்போடு
முடங்கிக்கிடக்கும்நான்
உன் அன்பின் கைகள்
என்னை மூழ்காமல் பிடித்தபடி
நீள்வதை உணர்கிறேன்.
விடிகாலைப் பனியில்
வாசனையற்ற ஆவியாய்
நம்மையறியாமல்
வெளிப்படுகிறது இதம்.
யுகங்கள் பலவாய்
பனிப்பாறைகளாகவே
வாழ்ந்து மடிகிறோம் நாம்
தாம்பத்யக் குகையைக் காத்தபடி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...