எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜூன், 2016

மௌனமே பார்வையால்..



மௌனமே பார்வையால்..

உன் அன்பில்
காட்டாற்று வேகம் இல்லையென்றாலும்
என்றும் வற்றாத ஜீவநதியின்
ஷாந்தம் உறவாடுகின்றது.
உன் உறவில்
பைத்தியக்காரத்தனமான
ஆவேசம் பீறிடாவிட்டாலும்
பசுவின் ஸ்பரிசம்போல்
சுகமளிக்கின்றது.
மென்மையான உறவின்
பிரிவின்போது உனது
உணர்ச்சிகளில்
சோக வெள்ளம்
முட்டிமோதி அணை உடைத்து
உன் கண் மடையை உடைத்துப்
பொங்கியெழுந்து உன்
மனதின் வேகத்தை
தாபத்தை
என்னை உணரச் செய்திருக்கின்றது.
பிரிவின் முடிவின்போது
என்னைக் கண்ட பரவசத்தில்
என்ன செய்வதென்று
அறியாமல் ஒரு க்ஷணம் நீ
திகைத்துப் பின் மெதுவாக
நடந்துவந்து
நான் உண்மையாகவே
வந்திருக்கின்றேனா என
என் கையை ஸ்பரிசித்து
உண்மைதான் என உணர்ந்தபின்,
உன் முகத்தில் பூத்த புன்னகைப்
பூவைக் கண்டதும்
எனக்கு உன் உள்ளம்
பூரணமாகப் புரிந்து போகின்றது.
தெரிந்தபின் எல்லாம் புரிந்தபின்
என்மேல் ரோஜாப் பூக்களைக்
கூடை கூடையாய் அர்ச்சித்து
அதில் என்னை மூழ்கடித்ததுபோல்
மூச்சுத் திணறுகின்றது.

-- 84 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...