எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜூன், 2016

இப்போது.



இப்போது

உன் அன்பு ஆவேசமாக
இருப்பதால்தான்
என்னால் அதை
ஏற்றுக்கொள்ளச் சத்தில்லை.
நீ என்னை எப்போதும்
வலியுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
கனவிலும் நனவிலும்
வந்து வந்து உனதன்பை
ஏற்றுக் கொள்ளும்படி. !
என்னால்தான் அதை
ஏற்றுக் கொள்ளத் தென்பில்லை.
நான் உன்னிடம் நடிக்கின்றேன்
சாமர்த்தியமாய்.
என்னை நானே
பாராட்டிக் கொள்கின்றேன்
என் திறமைக்காக.
இதனால் நீ புண்பட்டுப் போவதைப்
பார்த்தும் வாளாவிருக்கிறேன்.
நீ என் மனதிடம் அது
இளகி இருக்கும்போது கேட்டுப் பாரேன்.
அது எப்போதும் தன்
கடினத்தன்மையிலிருக்கும் போதும்
உனக்காக உருகிக் கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்வாய். !
நீ உணரவேண்டும் என்பதுதான்
என் விருப்பம்.

-- 85 ஆம் வுடைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...