எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 டிசம்பர், 2012

புயல்

ஒரு பூவை,
பறவையை,
மழையை,
குழந்தையை
ரசிப்பதைப் போன்றதல்ல
எதிர்பாராமல் எதிர்கொண்டுவரும்
ஒரு காற்றை ரசிப்பது.
திடுக்கிடும் அவள்
வீட்டுள் ஒளிந்து
பலகணிகளை
அடைக்க முயற்சிக்கிறாள்.
வீசும் காற்றோடு
தூறும் சாரல்
வெப்ப அறைக்குள்
கொஞ்சம் குளுமையைத்
தூவிச் செல்கிறது.
மூடப்பட்ட
வரவுக்கான பாதையில்
தன்னை இழந்த ஏக்கத்தோடு
சுற்றிச் சுழல்கிறது
காற்று.

2 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

வீசும் காற்றோடு
தூறும் சாரல்
வெப்ப அறைக்குள்
கொஞ்சம் குளுமையைத்
தூவிச் செல்கிறது.

பாதையில்
தன்னை இழந்த ஏக்கத்தோடு
சுற்றிச் சுழல்கிறது
காற்று.

Nalla varigal.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...